Unknown crocodile
0 Subscriptions 0 Followers
பாரதிய ஜனதா கட்சியின் இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள கட்சித் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு க ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உள்ளிட்ட பலரும் பாஜகவின் இச்செயலுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர பட்னாவிஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தேவேந்திர பட்னாவிஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் பதவி ஏற்றதற்கு வாழ்த்துக்கள் என்றும் பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வம் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் ஆகியோருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்னிலையில் சசிகலா குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியசாமி, சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் பட்சத்தில் அதிமுக தொண்டர்கள் அவருக்கு பின்னால் அணிவகுப்பு என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சாமி, சசிகலா குறித்த கேள்விகளுக்கும் சசிகலா வெளியே வந்தால் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் நிகழும் என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சசிகலாவின் சிறைக்காலம் இன்னும் ஓர் ஆண்டுகள் மட்டுமே இருப்பதாகவும், அவர் விரைவில் வெளியே வருவார் எனவும் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுக தொண்டர்கள் அனைவரும் அவருக்கு பின்னால் சென்று விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவை திறமையாகவும் சிறப்புடனும் நடத்தும் அனைத்து திறமையும் சசிகலாவிடம் உள்ளது எனவும், சசிகலா தலைமையில்தான் அதிமுக பிளவுபடாமல் இருக்கும் எனவும் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கும் முன்பே உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் நேரடி வாக்கெடுப்பு முறை மூலமாக மட்டுமே நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளேயே அந்த அறிவிப்பை மாற்றி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்புக்கு திமுக கண்டனம் தெரிவித்திருந்தது.
இதற்கு பதில் அளித்து இருந்த எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் தான் முதல்முறையாக மறைமுகத் தேர்தல் கொண்டு வரப்பட்டது எனவும், இதுகுறித்த சட்டமன்ற பதிவுகளையும் மேற்கோள் காட்டியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள், உள்ளாட்சி தேர்தலில் மறைமுகத் தேர்தல் முறையை திமுக கொண்டு வந்திருந்தாலும் அதற்காக முயற்சிகளையும் போராட்டங்களையும் செய்தது அதிமுகதான் என ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலை கொண்டுவர வேண்டுமென தொடர்ந்து அதிமுக போராடியதன் காரணமாகவே திமுக மாற்றத்தைக் கொண்டு வந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.